300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
பிரபல சின்னத்திரை நடிகை ஆயிஷா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் யோகேஷ் என்பவரை காதலித்து வந்ததை வெளிப்படையாக அறிவித்தார். இதனைதொடர்ந்து இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலான நிலையில், ஆயிஷா - யோகேஷ் திருமணம் விரைவிலேயே நடைபெறும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வந்தனர். ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகையில் யோகேஷுடன் எடுத்துக்கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களையும், டேட்டிங் செய்யும் போது பதிவிட்ட புகைப்படங்களையும் ஆயிஷா தனது இன்ஸ்டாவிலிருந்து திடீரென நீக்கியுள்ளார். மேலும், சமீப காலங்களாக ஆயிஷா தனது போட்டோஷூட் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார். சீரியல் நடிகைகளின் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை தொடர்ந்து பிரிவையும் துயரத்தையும் சந்தித்து வரும் நிலையில் ஆயிஷாவின் இந்த செயலால் யோகேஷுக்கும் ஆயிஷாவுக்கும் ப்ரேக்கப் ஆகிவிட்டதா? என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஆனால் இதுபற்றி ஆயிஷா எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.