உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் |

வருகிற 3ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனனில் பேரழகி 2, மற்றும் அர்ச்சனை பூக்கள் என்கிற இரண்டு புதிய தொடர்கள் ஒளிரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை 'பேரழகி 2' தொடர் இரவு 8.30 மணிக்கும், 'அர்ச்சனை பூக்கள்' தொடர் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. இந்த இரண்டு தொடர்களும் கன்னடத்தில் ஒளிபரப்பான 'லக்ஷனா' மற்றும் 'பாக்யலட்சுமி' தொடர்களின் டப்பிங் வெர்சனாகும்.
'பேரழகி 2' தொடரில் விஜயலட்சுமி, சுக்ருதான நாக் நடித்துள்ளனர். இந்த இருவரை சுற்றி நடக்கும் கதை. இருவரையும் 23 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் மாற்றி வைத்து விடுகிறார். இதில் விஜயலட்சுமி கருப்பாக இருப்பதால் அவரை மகளாகவும், பேத்தியாகவும் அவரது தந்தை மற்றும் அவரது தாயாரால் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை சகித்துக் கொண்டு தொலைக்காட்சி தொகுப்பாளராக வேண்டும் என்று கனவு காண்கிறார். அது நிறைவேறியதா என்பது கதை.
அர்ச்சனை பூக்கள் இரு சகோதரிகளின் கதை, சுதர்ஷன் ரங்கபிரசாத் சுஷ்மா கே.ராவ் நடித்துள்ளனர். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சகோதரிகள் எப்படி ஒருவரை ஒருவர் கைதூக்கி விட்டு காப்பாற்றுகிறார்கள் என்பது கதை.