ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'நினைத்தாலே இனிக்கும்' தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் ஸ்வாதி சர்மா, அட்ஜெஸ்மெண்ட் டார்ச்சரால் தான் சென்னைக்கு ஷூட்டிங் வரவே பயந்ததாக கூறியுள்ளார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவரான ஸ்வாதி சர்மா கன்னடத்தில் கண்டேயா கதே, துரோணா உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலக்கட்டத்தில் மாடலிங் செய்து கொண்டே நடிக்க வாய்ப்பு தேடி அலைந்த அவர், தன்னுடைய அம்மாவுடன் தான் ஆடிஷனுக்கு செல்வாராம். அப்படி ஒரு முறை ஆடிஷனுக்கு சென்ற போது அங்கிருந்த நபர் ஸ்வாதியின் அம்மா அருகிலிருக்கும் போதே அட்ஜெஸ்மெண்ட் செய்ய சொல்லி கேட்டுள்ளார். இதனையடுத்து ஸ்வாதியும் அவரது அம்மாவும் அந்த நபரை திட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இந்த காரணத்தினால் தான் 'நினைத்தாலே இனிக்கும்' ஷூட்டிங்கிற்காக சென்னை வரவே ஸ்வாதி பயந்ததாக கூறியுள்ளார்.