பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'நினைத்தாலே இனிக்கும்' தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் ஸ்வாதி சர்மா, அட்ஜெஸ்மெண்ட் டார்ச்சரால் தான் சென்னைக்கு ஷூட்டிங் வரவே பயந்ததாக கூறியுள்ளார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவரான ஸ்வாதி சர்மா கன்னடத்தில் கண்டேயா கதே, துரோணா உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலக்கட்டத்தில் மாடலிங் செய்து கொண்டே நடிக்க வாய்ப்பு தேடி அலைந்த அவர், தன்னுடைய அம்மாவுடன் தான் ஆடிஷனுக்கு செல்வாராம். அப்படி ஒரு முறை ஆடிஷனுக்கு சென்ற போது அங்கிருந்த நபர் ஸ்வாதியின் அம்மா அருகிலிருக்கும் போதே அட்ஜெஸ்மெண்ட் செய்ய சொல்லி கேட்டுள்ளார். இதனையடுத்து ஸ்வாதியும் அவரது அம்மாவும் அந்த நபரை திட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இந்த காரணத்தினால் தான் 'நினைத்தாலே இனிக்கும்' ஷூட்டிங்கிற்காக சென்னை வரவே ஸ்வாதி பயந்ததாக கூறியுள்ளார்.




