'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் பாண்டி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரிட்டோ மனோ நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக சந்தியா ராமசந்திரன் நடித்து வருகிறார். ரீல் ஜோடிகளான இருவரும் நிஜத்திலும் காதல் ஜோடிகளாக வலம் வர, கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனையடுத்து மனோ - சந்தியாவின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இந்நிலையில், தவமாய் தவமிருந்து சீரியலை விட்டு ப்ரிட்டோ மனோ திடீரென விலகியுள்ளார். அதேசமயம், உடனடியாக அவருக்கு பதிலாக பாண்டி ரோலில் நடிக்க நடிகர் சுதர்சனம் கமிட்டாகியுள்ளார். சுதர்சனம் சிப்பிக்குள் முத்து, வேலைக்காரன் மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜக்குமாரி தொடர்களின் மூலம் ஏற்கனவே நேயர்களுக்கு பரிட்சயமானவர் தான். இருப்பினும், ப்ரிட்டோ மனோவின் திடீர் விலகல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.