பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா | 'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் | அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு | பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் பாண்டி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரிட்டோ மனோ நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக சந்தியா ராமசந்திரன் நடித்து வருகிறார். ரீல் ஜோடிகளான இருவரும் நிஜத்திலும் காதல் ஜோடிகளாக வலம் வர, கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனையடுத்து மனோ - சந்தியாவின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இந்நிலையில், தவமாய் தவமிருந்து சீரியலை விட்டு ப்ரிட்டோ மனோ திடீரென விலகியுள்ளார். அதேசமயம், உடனடியாக அவருக்கு பதிலாக பாண்டி ரோலில் நடிக்க நடிகர் சுதர்சனம் கமிட்டாகியுள்ளார். சுதர்சனம் சிப்பிக்குள் முத்து, வேலைக்காரன் மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜக்குமாரி தொடர்களின் மூலம் ஏற்கனவே நேயர்களுக்கு பரிட்சயமானவர் தான். இருப்பினும், ப்ரிட்டோ மனோவின் திடீர் விலகல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.