மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் பாண்டி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரிட்டோ மனோ நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக சந்தியா ராமசந்திரன் நடித்து வருகிறார். ரீல் ஜோடிகளான இருவரும் நிஜத்திலும் காதல் ஜோடிகளாக வலம் வர, கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனையடுத்து மனோ - சந்தியாவின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இந்நிலையில், தவமாய் தவமிருந்து சீரியலை விட்டு ப்ரிட்டோ மனோ திடீரென விலகியுள்ளார். அதேசமயம், உடனடியாக அவருக்கு பதிலாக பாண்டி ரோலில் நடிக்க நடிகர் சுதர்சனம் கமிட்டாகியுள்ளார். சுதர்சனம் சிப்பிக்குள் முத்து, வேலைக்காரன் மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜக்குமாரி தொடர்களின் மூலம் ஏற்கனவே நேயர்களுக்கு பரிட்சயமானவர் தான். இருப்பினும், ப்ரிட்டோ மனோவின் திடீர் விலகல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.