பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு |

சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் சீக்கிரமாகவே காதலித்து திருமணம் செய்து கொண்டது போல் சீக்கிரமாகவே பிரிந்தும் விட்டனர். அவர்கள் பஞ்சாயத்து தான் சோஷியல் மீடியாவில் தற்போது பேசு பொருளாகியுள்ளது. சம்யுக்தா குறித்து விஷ்ணுகாந்த் சில பேட்டிகளில் பேசியிருந்ததை தொடர்ந்து சம்யுக்தா அண்மையில் லைவ் வீடியோவில் விஷ்ணுகாந்துக்கும் தனக்கும் இடையேயான பிரச்னை குறித்து விரிவாக பேசியிருந்தார். அதில், விஷ்ணுகாந்த் தன்னை மிரட்டி தான் திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து பலரும் விஷ்ணுகாந்தை விமர்சிக்க ஆரம்பித்தனர். விஷ்ணுகாந்தும் நேற்று (மே 17) மாலை 6 மணிக்கு லைவ்வில் வந்து உண்மையை பேசப்போவதாக போஸ்ட் செய்திருந்தார்.
இதனையடுத்து நேற்று மதியமே இன்ஸ்டாகிராம் லைவ்வில் வந்த சம்யுக்தா, ‛சம்யுக்தாவின் உறவினர் ஒருவருக்கு போன் செய்து சம்யுக்தா பற்றிய பாஸ்ட் லைப் ரகசியங்களும், சம்யுக்தாவின் 4 மணி நேர வீடியோவும் தன்னிடம் இருப்பதாகவும், தொடர்ந்து என்னை பற்றி சம்யுக்தா பேசினால் அதை வெளியிடுவேன்' என்று விஷ்ணுகாந்த் மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக சம்யுக்தா போலீசில் புகார் அளித்ததாகவும் ஆனால், விஷ்ணுகாந்த் விசாரணைக்கு வரவில்லை. சம்மனையும் வாங்கவில்லை என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.