தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் |
சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் சீக்கிரமாகவே காதலித்து திருமணம் செய்து கொண்டது போல் சீக்கிரமாகவே பிரிந்தும் விட்டனர். அவர்கள் பஞ்சாயத்து தான் சோஷியல் மீடியாவில் தற்போது பேசு பொருளாகியுள்ளது. சம்யுக்தா குறித்து விஷ்ணுகாந்த் சில பேட்டிகளில் பேசியிருந்ததை தொடர்ந்து சம்யுக்தா அண்மையில் லைவ் வீடியோவில் விஷ்ணுகாந்துக்கும் தனக்கும் இடையேயான பிரச்னை குறித்து விரிவாக பேசியிருந்தார். அதில், விஷ்ணுகாந்த் தன்னை மிரட்டி தான் திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து பலரும் விஷ்ணுகாந்தை விமர்சிக்க ஆரம்பித்தனர். விஷ்ணுகாந்தும் நேற்று (மே 17) மாலை 6 மணிக்கு லைவ்வில் வந்து உண்மையை பேசப்போவதாக போஸ்ட் செய்திருந்தார்.
இதனையடுத்து நேற்று மதியமே இன்ஸ்டாகிராம் லைவ்வில் வந்த சம்யுக்தா, ‛சம்யுக்தாவின் உறவினர் ஒருவருக்கு போன் செய்து சம்யுக்தா பற்றிய பாஸ்ட் லைப் ரகசியங்களும், சம்யுக்தாவின் 4 மணி நேர வீடியோவும் தன்னிடம் இருப்பதாகவும், தொடர்ந்து என்னை பற்றி சம்யுக்தா பேசினால் அதை வெளியிடுவேன்' என்று விஷ்ணுகாந்த் மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக சம்யுக்தா போலீசில் புகார் அளித்ததாகவும் ஆனால், விஷ்ணுகாந்த் விசாரணைக்கு வரவில்லை. சம்மனையும் வாங்கவில்லை என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.