பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

சினிமா, சின்னத்திரை சீரியல்களில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த நீலிமா ராணிக்கு ஒரு காலக்கட்டத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. திருமணத்திற்கு பின் குடும்பத்திற்காக நடிப்பை கைவிட்ட நீலிமா சீரியல் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் நீலிமா வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவியும் அதேவேளையில் சிலர் அவரை பற்றி ஆபாசமாக பேசியும் வருகின்றனர். அப்போதெல்லாம் பாடி ஷேமிங், நெகட்டிவ் கமெண்டுகளை தூக்கி போட்டுவிட்டு பாசிட்டிவாக ரியாக்ட் செய்து வந்த நீலிமா, தற்போது சிலர் தனது மார்பகங்கள் குறித்து ஆபாசமாக கமெண்ட் செய்வதாக வருத்தப்பட்டுள்ளார்.
நீலிமாவுக்கு அண்மையில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. இதனால் அவரது உடல் எடையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிலர் நீலிமாவை ஆபாசமாக பாடி ஷேமிங் செய்வதோடு அவரது மார்பகங்கள் பற்றியும் மோசமாக பதிவிட்டு வருகின்றனர். இதனால் வருத்தமடைந்த அவர் அண்மையில் ஒரு பேட்டியின் போது, 'குழந்தைக்கு பால் கொடுப்பதால் தான் என் மார்பகம் அப்படி இருக்கிறது என்று அவர்களிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது'என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.