காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் |

சினிமா, சின்னத்திரை சீரியல்களில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த நீலிமா ராணிக்கு ஒரு காலக்கட்டத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. திருமணத்திற்கு பின் குடும்பத்திற்காக நடிப்பை கைவிட்ட நீலிமா சீரியல் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் நீலிமா வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவியும் அதேவேளையில் சிலர் அவரை பற்றி ஆபாசமாக பேசியும் வருகின்றனர். அப்போதெல்லாம் பாடி ஷேமிங், நெகட்டிவ் கமெண்டுகளை தூக்கி போட்டுவிட்டு பாசிட்டிவாக ரியாக்ட் செய்து வந்த நீலிமா, தற்போது சிலர் தனது மார்பகங்கள் குறித்து ஆபாசமாக கமெண்ட் செய்வதாக வருத்தப்பட்டுள்ளார்.
நீலிமாவுக்கு அண்மையில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. இதனால் அவரது உடல் எடையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிலர் நீலிமாவை ஆபாசமாக பாடி ஷேமிங் செய்வதோடு அவரது மார்பகங்கள் பற்றியும் மோசமாக பதிவிட்டு வருகின்றனர். இதனால் வருத்தமடைந்த அவர் அண்மையில் ஒரு பேட்டியின் போது, 'குழந்தைக்கு பால் கொடுப்பதால் தான் என் மார்பகம் அப்படி இருக்கிறது என்று அவர்களிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது'என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.




