ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

சினிமா, சின்னத்திரை சீரியல்களில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த நீலிமா ராணிக்கு ஒரு காலக்கட்டத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. திருமணத்திற்கு பின் குடும்பத்திற்காக நடிப்பை கைவிட்ட நீலிமா சீரியல் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் நீலிமா வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவியும் அதேவேளையில் சிலர் அவரை பற்றி ஆபாசமாக பேசியும் வருகின்றனர். அப்போதெல்லாம் பாடி ஷேமிங், நெகட்டிவ் கமெண்டுகளை தூக்கி போட்டுவிட்டு பாசிட்டிவாக ரியாக்ட் செய்து வந்த நீலிமா, தற்போது சிலர் தனது மார்பகங்கள் குறித்து ஆபாசமாக கமெண்ட் செய்வதாக வருத்தப்பட்டுள்ளார்.
நீலிமாவுக்கு அண்மையில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. இதனால் அவரது உடல் எடையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிலர் நீலிமாவை ஆபாசமாக பாடி ஷேமிங் செய்வதோடு அவரது மார்பகங்கள் பற்றியும் மோசமாக பதிவிட்டு வருகின்றனர். இதனால் வருத்தமடைந்த அவர் அண்மையில் ஒரு பேட்டியின் போது, 'குழந்தைக்கு பால் கொடுப்பதால் தான் என் மார்பகம் அப்படி இருக்கிறது என்று அவர்களிடம் சொல்லி என்ன ஆகப்போகிறது'என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.