போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
வெளியில் தைரியமாக இருப்பது போல் தோற்றமளிக்கும் பலரும் தங்களுக்குள் ஏதோ ஒரு விஷயத்திற்காக பயந்து கொண்டு தான் இருப்பார்கள். அந்த வகையில், சர்ச்சை நாயகி வனிதா, தன் வாழ்வில் நடக்கும் பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்வதும் பேசுவதும் என தைரியமான பெண்ணுக்கு உதாரணமாக இருந்து வருகிறார். ஆனால், அவருக்குள்ளும் பயம் இருக்கிறது. மிகச்சிறிய அறை, லிப்ட், இருட்டான குகை, திருவிழாக்கூட்டம், ட்ரெயின் போன்ற இடங்களில் இருக்கும் போது நாம் செத்துவிடுவோமோ என்ற பயம் சிலருக்கு உண்டாகும்.
அந்த நோய்க்கு பெயர் தான் ‛க்ளாஸ்ட்ரோபோபியா'. அண்மையில் அளித்த பேட்டியில் தனக்கும் க்ளாஸ்ட்ரோபோபியா இருப்பதாக வனிதா கூறியுள்ளார். லிப்ட், கழிவறை போன்ற சிறிய இடங்களில் தன்னால் நீண்ட நேரம் இருக்க முடியாது என்றும், தனக்கு மிகவும் நெருக்கமான சிலருக்கு மட்டுமே இந்த நோய் எனக்கிருப்பது தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.