நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தமிழ் சின்னத்திரையில் இன்று மக்களுக்கு பிடித்தமான பிரபலங்கள் சிலர் மியூசிக் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் அறிமுகமாகினர். அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களின் மெமரிகளில் கலந்துள்ள முன்னாள் வீஜேக்கள் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்தனர். அப்போது, தங்களுடன் இணைந்து பணிபுரிந்து, வாழ்ந்து மறைந்த ஆனந்த கண்ணன் பற்றி தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
வீஜே லிங்கேஷ், ஆனந்த கண்ணன் கோவிட் சமயத்தின் போது தனக்கு பகிர்ந்திருந்த வாய்ஸ் நோட்டை போட்டு காண்பித்தார். அதில் ஆனந்த கண்ணன் மனிதம் குறித்து எதார்த்தமாக சொல்லியிருந்த கருத்துகள் இருந்தது. இதைகேட்டு அங்கிருந்த ஆனந்த கண்ணனின் நண்பர்கள் அனைவரும் கண்கலங்கினர்.
அதன்பின் பேசிய பிரஜன், 'நானும் ஆனந்த கண்ணனும் முள்ளும் மலரும் என்ற ரஜினி சார் படத்தின் டைட்டிலில் படம் ஒன்று நடித்திருந்தோம். 85% படம் முடிந்திருந்த நிலையில் சில காரணங்களால் படம் நின்றுவிட்டது. ஆனந்த கண்ணனை அதுமிகவும் பாதித்தது. அந்த படத்தை மீண்டும் ஆரம்பித்து முடிக்க வேண்டும் என மிகவும் விரும்பினான். அந்த படத்தை முடித்து ரிலீஸ் செய்வது தான் ஆனந்த கண்ணனுக்கும் விருப்பமாக இருக்கும். அதற்காக நானும் என்னால் ஆன முயற்சிகளை செய்வேன்' என்று அதில் கூறியிருந்தார்.
அந்த நேர்காணலில் முன்னாள் வீஜேக்களான பிரஜன், லிங்கேஷ், காஜல் பசுபதி, நிஷா, ஹேமா, சந்தியா, முகமது அசீம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.