தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

சின்னத்திரையில் சீரியல்களில் ஒரு காலத்தில் பேவரைட் ஹீரோவாக வலம் வந்த பிரஜின் பத்மநாபன் தற்போது வெள்ளித்திரை படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். திரைப்பட வாய்ப்புக்காக 'வைதேகி காத்திருந்தாள்' தொடரிலிருந்து சில எபிசோடுகளுடன் விலகிவிட்டார். பிரஜின் நடிப்பில் டி-3 திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தவிரவும் 'ஹையானா', 'நினைவெல்லாம் நீயடா' என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சினிமா என்ட்ரிக்கு பிறகு சின்னத்திரை பக்கம் மீண்டும் வரமாட்டார் என பிரஜினின் ரசிகர்கள் கவலையுற்றிருந்த நிலையில், அவர் தற்போது ஜீ தமிழ் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். தவமாய் தவமிருந்து என்கிற தொடரில் பிரஜின் கடவுள் முருகனாக கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அதன் புரோமோவை பார்க்கும் போது சீடன் படத்தில் தனுஷின் சரவணன் கதாபாத்திரத்தை காப்பி அடித்திருப்பது போல் உள்ளது.