'சூர்யா- 46' படத்தின் டைட்டில், ரிலீஸ் குறித்த தகவல் வெளியானது! | பிளாஷ்பேக்: வாள்வீச்சு நாயகன் ரஞ்சனின் வெள்ளித்திரை வரவுக்கு வித்திட்ட “ரிஷ்யசிருங்கர்” | கவர்ச்சி மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்த கயாடு லோஹர்! | 'வாரணாசி' படப்பிடிப்பை ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி! | 'வித் லவ்' ஹீரோவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா | குடியிருந்த கோயில், அண்ணாமலை, சிங்கம் 3 - ஞாயிறு திரைப்படங்கள் | காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் |

தமிழ் சின்னத்திரையில் இன்று மக்களுக்கு பிடித்தமான பிரபலங்கள் சிலர் மியூசிக் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் அறிமுகமாகினர். அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களின் மெமரிகளில் கலந்துள்ள முன்னாள் வீஜேக்கள் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்தனர். அப்போது, தங்களுடன் இணைந்து பணிபுரிந்து, வாழ்ந்து மறைந்த ஆனந்த கண்ணன் பற்றி தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
வீஜே லிங்கேஷ், ஆனந்த கண்ணன் கோவிட் சமயத்தின் போது தனக்கு பகிர்ந்திருந்த வாய்ஸ் நோட்டை போட்டு காண்பித்தார். அதில் ஆனந்த கண்ணன் மனிதம் குறித்து எதார்த்தமாக சொல்லியிருந்த கருத்துகள் இருந்தது. இதைகேட்டு அங்கிருந்த ஆனந்த கண்ணனின் நண்பர்கள் அனைவரும் கண்கலங்கினர்.
அதன்பின் பேசிய பிரஜன், 'நானும் ஆனந்த கண்ணனும் முள்ளும் மலரும் என்ற ரஜினி சார் படத்தின் டைட்டிலில் படம் ஒன்று நடித்திருந்தோம். 85% படம் முடிந்திருந்த நிலையில் சில காரணங்களால் படம் நின்றுவிட்டது. ஆனந்த கண்ணனை அதுமிகவும் பாதித்தது. அந்த படத்தை மீண்டும் ஆரம்பித்து முடிக்க வேண்டும் என மிகவும் விரும்பினான். அந்த படத்தை முடித்து ரிலீஸ் செய்வது தான் ஆனந்த கண்ணனுக்கும் விருப்பமாக இருக்கும். அதற்காக நானும் என்னால் ஆன முயற்சிகளை செய்வேன்' என்று அதில் கூறியிருந்தார்.
அந்த நேர்காணலில் முன்னாள் வீஜேக்களான பிரஜன், லிங்கேஷ், காஜல் பசுபதி, நிஷா, ஹேமா, சந்தியா, முகமது அசீம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.