ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் 'மாநாடு' | ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நட்சத்திர நிகழ்ச்சியான பிக்பாஸ் விரைவில் தனது 6வது சீசனை தொடங்க உள்ளது. இதனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதுவரை இந்த நிகழ்ச்சியல் சேனல் நிர்வாகம் அமைக்கும் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலங்களே கலந்து கொண்டு வந்தனர். குறிப்பாக நடிகர், நடிகைகள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேனல் குழு தேர்வு செய்யும் குழுவுடன் பொதுமக்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதற்கான புரமோவை விஜய் டி.வி வெளியிட்டுள்ளது.
பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் தங்களுடைய சுய குறிப்போடு கூடிய ஒரு காணொளி காட்சியை பதிவு செய்து அதனை vijay.startv.com என்ற தளத்திற்கு சென்று பதிவேற்றம் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ப ஆர்வமாக இருப்பது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. 6வது சீசனில் 3 பேர் பொதுமக்களிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.