ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
விஜய் டிவிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' தொடர் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கிருவர் தொடர்களில் நடித்தார். தற்போது 'இது சொல்ல மறந்த கதை' சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கும் சின்னத்திரை நடிகர் தினேஷூக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தினேஷ் கூறியிருப்பதாவது: எல்லோர் வீட்டிலும் கணவன், மனைவிக்குள்ளாக சண்டை இருப்பது போன்றுதான் எங்களுக்குள்ளும் சின்ன சண்டை இருக்கிறது. சிலர் சீக்கிரம் புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்து விடுவார்கள். சிலருக்கு அது நேரம் எடுக்கும். எங்களுக்குள்ளும் அது போலத்தான். சிறிது காலம் பிரிந்து இருக்கிறோம். ஆனால், இப்போது வரை நானோ, ரச்சிதாவோ சட்டரீதியாக பிரியலாம் என்று நினைத்து எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்பது மட்டும் உறுதி.
விரைவில் காலம் எல்லாவற்றையும் சரி செய்யும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். ரச்சிதா என்னை விட தைரியசாலி. தவறாக பரவும் வதந்திகளை கண்டு கொள்ள மாட்டார். நானும் அதை புறந்தள்ளி விடுவேன். இப்போதைக்கு இருவரும் அவரவர் வேலையில் கவனமாக இருக்கிறோம். விரைவில் நல்லது நடக்கும் என நம்புகிறேன். என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இருவரும் பிரிந்து வாழ்வது உறுதியாகி இருக்கிறது. ரச்சிதா தரப்பில் விவாகரத்துக்கான சட்டரீதியான ஏற்பாடுகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.