பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

விஜய் டிவிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' தொடர் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கிருவர் தொடர்களில் நடித்தார். தற்போது 'இது சொல்ல மறந்த கதை' சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கும் சின்னத்திரை நடிகர் தினேஷூக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தினேஷ் கூறியிருப்பதாவது: எல்லோர் வீட்டிலும் கணவன், மனைவிக்குள்ளாக சண்டை இருப்பது போன்றுதான் எங்களுக்குள்ளும் சின்ன சண்டை இருக்கிறது. சிலர் சீக்கிரம் புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்து விடுவார்கள். சிலருக்கு அது நேரம் எடுக்கும். எங்களுக்குள்ளும் அது போலத்தான். சிறிது காலம் பிரிந்து இருக்கிறோம். ஆனால், இப்போது வரை நானோ, ரச்சிதாவோ சட்டரீதியாக பிரியலாம் என்று நினைத்து எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்பது மட்டும் உறுதி.
விரைவில் காலம் எல்லாவற்றையும் சரி செய்யும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். ரச்சிதா என்னை விட தைரியசாலி. தவறாக பரவும் வதந்திகளை கண்டு கொள்ள மாட்டார். நானும் அதை புறந்தள்ளி விடுவேன். இப்போதைக்கு இருவரும் அவரவர் வேலையில் கவனமாக இருக்கிறோம். விரைவில் நல்லது நடக்கும் என நம்புகிறேன். என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இருவரும் பிரிந்து வாழ்வது உறுதியாகி இருக்கிறது. ரச்சிதா தரப்பில் விவாகரத்துக்கான சட்டரீதியான ஏற்பாடுகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.