தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடைசி வாரம் வரை மிகவும் கடினமான போட்டியாளராக இருந்தார் ஜூலி. முந்தைய சீசனில் செய்த தவறை செய்யாமல், தான் இழந்த பெயரை மீண்டும் பெறுவதற்காக மக்களிடம் தன்னை நிரூபிப்பதற்காக விளையாடினார் ஜூலி. கடைசி வாரம் வரை வந்துவிட்டதால் கண்டிப்பாக இறுதிபோட்டியில் ஜூலி விளையாடுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஜூலி இரண்டாவது எவிக்ஷனில் அபிராமிக்கு அடுத்தப்படியாக வெளியேறிவிட்டார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஜூலி, சமூக வலைதளத்தில் தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'வெற்றி என்பது இறுதியில் நாம் எதை பெற்றோம் என்பது அல்ல. வெற்றிக்கான பயணத்தில் நாம் யாராக இருந்தோம் என்பதே முக்கியம்' என பதிவிட்டிருந்தார். ஜூலியின் இந்த பாசிட்டிவான ஆட்டிட்யூட் பிக்பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜூலிக்கு ஆதரவாக பேசி வரும் பலரும் 'நீ மக்கள் மனதை வென்றுவிட்டாய். இது தான் உனது வெற்றி' என அவரை புகழ்ந்து வருகின்றனர்.