வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இரண்டு மனைவிகளை கல்யாணம் செய்து கொண்டு நாயகன் கோபி படும் பாடும், கோபியால் குடும்பத்தினர் படும் கஷ்டங்களும் என சென்டிமென்ட்டாக பேமிலி ஆடியன்ஸை சூப்பராக கவர் செய்து வருகிறது. தற்போது இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன் சீரியலை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்யன், பாக்கியாவின் மூத்த மகனாக செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கு சமீபத்தில் சின்னத்திரை நடிகை ஷபானாவுடன் திருமணம் ஆனது. இந்நிலையில், அவர் இந்த தொடரை விட்டு விலகியுள்ளார். மேலும், செழியன் கதாபாத்திரத்தில் விகாஷ் சம்பத் என்ற நடிகர் நடிக்கவுள்ளார். இவர் 'ராஜபார்வை' என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.