என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'இதயத்தை திருடாதே' தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஹீமா பிந்து. இளைஞர்களின் கனவு கன்னி பட்டியலில் இடம் பிடித்துள்ள அவர், தற்போது செய்துள்ள காரியத்தால் பலரது மனங்களிலும் இடம் பிடித்துள்ளார்.
பொதுவாக தற்போது வெளிவரும் சீரியல்களில் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் திருமணமே நடந்தால் கூட அவர்களுக்கு இடையே கணவன் மனைவிக்கு இடையேயான தாம்பத்திய உறவு நடக்காதது போலவே காண்பித்து வருகின்றனர். காரணம் இப்போதுள்ள சீரியல் நடிகைகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் பெரிதாக நடிக்க வருவதில்லை என்பதோடு, நடிகைகள் இளைஞர்களை கவரும் வகையில், காதல் நாயகிகளாக வலம் வந்தால் மட்டுமே டிஆர்பியை அள்ள முடியும் என சீரியல் குழுவினர் கருதுவதால் அவ்வாறு திரைக்கதை வடிவமைக்கப்படுகிறது.
ஆனால், அந்த இலக்கணத்தை உடைத்துள்ள இதயத்தை திருடாதே சீரியலில், ஹீமா பிந்து ஒரு குழந்தைக்கு தாயாக நடித்து வருகிறார். ஒரு பக்கம் ஹீரோவுடன் ரொமான்ஸூம் மற்றொரு பக்கம் அன்புள்ளம் கொண்ட தாயாகவும் நடிப்பில் அசத்தி வருகிறார். இதானாலேயே ஹீமாவுக்கு ஜெனியூனான ரசிகர் பட்டாளம் உள்ளது.
ஹீமா பிந்து, நடிப்பில் மட்டுமல்ல நிஜத்திலும் தான் தாயுள்ளம் கொண்டவர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சிறப்பான காரியத்தை செய்துள்ளார். அவர், சமீபத்தில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விளையாடி, அந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த மகிழ்வான தருணத்தை பகிர்ந்துள்ள அவர், அன்பு பற்றி திருவள்ளுவரின் அருமையான குறள் ஒன்றை நச்சென பதிவெட்டுள்ளார். அந்த பதிவை பார்க்கும் பலரும் ஹீமா பிந்து நடிகை என்பதை தாண்டி மிகவும் நல்ல இதயம் கொண்டவர் என பாராட்டி வருகின்றனர்.