ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! | முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கும் தேவா! | விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்? | தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்! | அஜய் தேவ்கனை சந்தித்த குஷ்பூ | ஜானி மாஸ்டருக்கு நன்றி சொன்ன ஜாக்குலின் பெர்னாண்டஸ் | போர்க்கப்பலை பார்வையிட்ட மோகன்லால் ; அதிகாரிகள் உற்சாக வரவேற்பு | அது என்னுடைய கார் அல்ல ; ஷாஜி கைலாஷ் விளக்கம் | 6 வருடமாக டார்ச்சர் கொடுத்த விமர்சகர் ; நித்யா மேனன் அதிர்ச்சி தகவல் |
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பளரான அனிதாவுக்கு இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக இருந்து வந்தனர். செய்தியே கேட்காத பலரும் இவரை சைட் அடிப்பதற்காக குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனலை பார்க்க ஆரம்பித்தனர். அனிதாவின் புகழ் அதிகரிக்க சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையினை நிறைவேற்ற முயற்சி செய்து வந்தார். ஆனால், அனிதாவுக்கோ சினிமாவிலும் செய்தி வாசிக்கும் கதாபாத்திரமே கிடைத்தது.
இந்நிலையில் தான் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் அனிதா பரவலாக பிரபலமானலும், அவரது பெயரும் டேமேஜ் ஆனது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சிக்கும் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர், முந்தைய சீசனின் போது பாலாஜி மற்றும் அனிதாவை கடுமையாக விமர்சித்திருந்தார். அதன்பிறகு பாலாஜி ரவீந்தருடன் சமரசமாகி அவருடைய தயாரிப்பில் படமும் நடிக்கவுள்ளார். ஆனால், அனிதா - ரவீந்தர் பிரச்னை ஓயவில்லை.
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனிதாவை ரவீந்தர் மீண்டும் விமர்சித்துள்ளார். அதில் அவர், 'உன்னுடைய தந்திரம் இனி பலிக்காது. உன் பருப்பு இந்த தடவ வேகாது குழந்தை. பாலாஜி தம்பி செம க்ளாரிட்டி விளையாடிட்டு இருக்காரு. நீ திருந்தவே மாட்ட சகுந்தலா தேவி' என விமர்சித்துள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் ரவீந்தர் - அனிதா போர் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என சொல்லி வருகின்றனர்.