நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பளரான அனிதாவுக்கு இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக இருந்து வந்தனர். செய்தியே கேட்காத பலரும் இவரை சைட் அடிப்பதற்காக குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனலை பார்க்க ஆரம்பித்தனர். அனிதாவின் புகழ் அதிகரிக்க சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையினை நிறைவேற்ற முயற்சி செய்து வந்தார். ஆனால், அனிதாவுக்கோ சினிமாவிலும் செய்தி வாசிக்கும் கதாபாத்திரமே கிடைத்தது.
இந்நிலையில் தான் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் அனிதா பரவலாக பிரபலமானலும், அவரது பெயரும் டேமேஜ் ஆனது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சிக்கும் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர், முந்தைய சீசனின் போது பாலாஜி மற்றும் அனிதாவை கடுமையாக விமர்சித்திருந்தார். அதன்பிறகு பாலாஜி ரவீந்தருடன் சமரசமாகி அவருடைய தயாரிப்பில் படமும் நடிக்கவுள்ளார். ஆனால், அனிதா - ரவீந்தர் பிரச்னை ஓயவில்லை.
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனிதாவை ரவீந்தர் மீண்டும் விமர்சித்துள்ளார். அதில் அவர், 'உன்னுடைய தந்திரம் இனி பலிக்காது. உன் பருப்பு இந்த தடவ வேகாது குழந்தை. பாலாஜி தம்பி செம க்ளாரிட்டி விளையாடிட்டு இருக்காரு. நீ திருந்தவே மாட்ட சகுந்தலா தேவி' என விமர்சித்துள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் ரவீந்தர் - அனிதா போர் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என சொல்லி வருகின்றனர்.