கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கு கென்ன வேலி தொடரில், ப்ரியங்கா குமார், சுவாமிநாதன் அனந்தராமன், ஜோதி ராய், அக்ஷிதா அசோக் ஆகியோர் நடித்து வருகின்றனர். கடந்த ஒருவருட காலத்தில் அதிகமான நடிகர்கள் ஒரு தொடரை விட்டு வெளியேறியுள்ளனர் என்றால் அது காற்றுக்கென்ன வேலி தான். ஹீரோயின் ப்ரியங்கா குமாரும், வில்லி அக்ஷிதா அசோக் மட்டும் தான் இதுவரை மாறவில்லை. பல முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் வெளியேறி வருவதுடன், சில காதாபாத்திரங்கள் முடித்தும் வைக்கப்படுகின்றன.
அந்த வகையில் புலி ராகவேந்திரன் இந்த தொடரில் மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், சமீபகாலமாக இந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மேலும், மாறன் கதாபாத்திரம் விரைவில் தொடரிலிருந்து நீக்கப்படும் என்பதையும் புலி ராகவேந்திரன் உருக்கத்துடன் கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து நடிப்புக்கு முழுக்கு போட்டு வேறு வேலை பார்க்கப்போவதாகவும் மாறன் கூறியிருந்தார்.
மாறன் சீரியலை விட்டு விலகுவது பலருக்கும் வருத்தமாக உள்ளது. இந்நிலையில் சகநடிகை மற்றும் தோழியுமான ப்ரியங்கா குமாருக்கு மாறன், தொடரை விட்டு நீங்கும் முன் அழகான கரடி பொம்மை ஒன்றை புலி ராகவேந்திரன் பரிசாக கொடுத்துள்ளார். அதன் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.