இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஹிட் சீரியல்களில் ஒன்றான 'கண்ணான கண்ணே' சீரியலில் பப்லு, நித்தியா தாஸ், நிமிஷிகா, ராகுல் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நடிகை நித்தியா தாஸ் யமுனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியின் சித்தியாக நடித்து வந்தார். அவரது கதாபாத்திரம் சீரியலில் முக்கிய இடத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடரிலிருந்து நித்தியா தாஸ் ஏன் விலகினார் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இனி யமுனா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு, சின்னத்திரை வட்டாரங்களில் சோனியா போஸ் நடிப்பார் என பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. கண்ணானே கண்ணே தொடர் இதுவரை 300 எபிசோடுகள் வெற்றிகரமாக கடந்துள்ளது.