‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜெயா டிவியில் தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தித் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஐயப்ப பக்தன் அழகனுக்கு மல்லிகா, சீதா என 2 மகள்கள். காட்டில் உள்ள ஒரு விசேஷ மூலிகையினால் எல்லோருக்கும் இலவச சிகிச்சை அளிக்கிறான். அழகன். அந்த அபூர்வ மூலிகையின் ரகசியத்தைப் பெற கேசவன் என்பவனும் மந்தாகினி என்ற அவனது தோழியும் சகல விதமான முயற்சிகளையும் செய்கிறார்கள். முதல் கட்டமாக அழகனின் குழந்தைகள் இருவரையும் சித்ரவதை செய்கிறார்கள். வேதனை பொறுக்காத குழந்தைகளின் அழுகுரல் கேட்டு உடனடியாக ஐயப்பன் அவர்களுக்கு உதவினார் என்பது புராணம். தொடரை, ஸ்ரீசுப்பிரமணியம் என்டர்பிரசஸ்சுக்காக எஸ்.கார்த்திகேயன் தயாரிக்கிறார். கதை:சரவணன். வசனம்: கே.பி.அறிவானந்தம். ஹர்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். பாலாஜி, சஞ்சய், மீனாகுமாரி, கே.ஆர்.விஜயா, டில்லி கணேஷ், பிரவினா, ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோரும் உண்டு. டைரக்டர் துளசிதாஸ் இயக்குகிறார்.