இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தொகுப்பாளினியாக களமிறங்கிய ஐஸ்வர்யா, சூப்பர் குடும்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு சிவாகார்த்திகேயனுடன் ஜோடி நம்பர் நிகழ்ச்சியில் நடனமாடி அசத்தி பிரபலமானார். தொடந்து வீஜே, சீரியல் நடிகை என சிறகடிந்த பறந்த ஐஸ்வர்யாவை தேவதையாக நினைத்து சுற்றி வந்த ரசிகர் கூட்டம் ஏராளம்.
இந்நிலையில் அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பின் திரையில் தோன்றாவிட்டாலும் சோஷியல் மீடியாக்களில் தன் வாழ்வில் நடக்கும் மகிழ்ச்சியான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமீபத்தில் தெரிவித்திருந்த அவர், தற்போது மற்ற சீரியல் நடிகைகள் போலவே போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தனது கர்ப்பமான வயிற்றில் பூமி போன்ற பெயிண்டிங் வரைந்து, மேலே ஒருபுறம் சந்திரனையும் மறுபுறம் சூரியனையும் வைத்து, உடல் முழுவதும் செடி கொடிகளை சுற்றிக் கொண்டு 'இயற்கை தாய்' என்பதை குறிப்பாக காட்டும் வகையில் போட்டோ எடுத்துள்ளார்.
வைரலாகும் இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டீசன்கள் ஐஸ்வர்யாவின் கலை ஆர்வத்தை கலாய்ப்பதா அல்லது குழந்தைக்காக வாழ்த்துகள் சொல்வதா என்ற தெரியாமல் குழப்பத்துடன் சுற்றி வருகின்றனர்.