ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தொகுப்பாளினியாக களமிறங்கிய ஐஸ்வர்யா, சூப்பர் குடும்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு சிவாகார்த்திகேயனுடன் ஜோடி நம்பர் நிகழ்ச்சியில் நடனமாடி அசத்தி பிரபலமானார். தொடந்து வீஜே, சீரியல் நடிகை என சிறகடிந்த பறந்த ஐஸ்வர்யாவை தேவதையாக நினைத்து சுற்றி வந்த ரசிகர் கூட்டம் ஏராளம்.
இந்நிலையில் அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பின் திரையில் தோன்றாவிட்டாலும் சோஷியல் மீடியாக்களில் தன் வாழ்வில் நடக்கும் மகிழ்ச்சியான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமீபத்தில் தெரிவித்திருந்த அவர், தற்போது மற்ற சீரியல் நடிகைகள் போலவே போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தனது கர்ப்பமான வயிற்றில் பூமி போன்ற பெயிண்டிங் வரைந்து, மேலே ஒருபுறம் சந்திரனையும் மறுபுறம் சூரியனையும் வைத்து, உடல் முழுவதும் செடி கொடிகளை சுற்றிக் கொண்டு 'இயற்கை தாய்' என்பதை குறிப்பாக காட்டும் வகையில் போட்டோ எடுத்துள்ளார்.
வைரலாகும் இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டீசன்கள் ஐஸ்வர்யாவின் கலை ஆர்வத்தை கலாய்ப்பதா அல்லது குழந்தைக்காக வாழ்த்துகள் சொல்வதா என்ற தெரியாமல் குழப்பத்துடன் சுற்றி வருகின்றனர்.