தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ஆஷிகா படுகோன் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் சின்னத்திரை நடிகையாக பிரபலமாகியுள்ளார். நிஹாரிகா, த்ரிவேணி சங்கமம், கதலோ ராஜகுமாரி ஆகிய ஹிட் சீரியலில் நடித்து வந்த ஆஷிகா தமிழில் தமிழ்ச்செல்வி தொடரின் மூலம் அறிமுகமானார். தமிழ் ரசிகர்களிடையே இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றாலும் 247-வது எபிசோடிலேயே தொடர் முடிவுற்றது.
இதற்கிடையில் ஆஷிகா படுகோனும் தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியலின் பாதியிலேயே வெளியேறினார். எனினும் தமிழில் தனக்கான ரசிகர் பட்டாளத்தை இந்த தொடரில் நடித்ததன் மூலம் உருவாக்கி கொண்டார். இந்நிலையில் ஆஷிகாவுக்கு சமீபத்தில் சேட்டன் ஷெட்டி குமார் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அவரது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகும் வரும் நிலையில் தமிழ் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை ஆஷிகா படுகோன் - சேட்டன் ஷெட்டி குமார் தம்பதியினருக்கு தெரிவித்து வருகின்றனர்.