வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் |
பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ஆஷிகா படுகோன் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் சின்னத்திரை நடிகையாக பிரபலமாகியுள்ளார். நிஹாரிகா, த்ரிவேணி சங்கமம், கதலோ ராஜகுமாரி ஆகிய ஹிட் சீரியலில் நடித்து வந்த ஆஷிகா தமிழில் தமிழ்ச்செல்வி தொடரின் மூலம் அறிமுகமானார். தமிழ் ரசிகர்களிடையே இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றாலும் 247-வது எபிசோடிலேயே தொடர் முடிவுற்றது.
இதற்கிடையில் ஆஷிகா படுகோனும் தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியலின் பாதியிலேயே வெளியேறினார். எனினும் தமிழில் தனக்கான ரசிகர் பட்டாளத்தை இந்த தொடரில் நடித்ததன் மூலம் உருவாக்கி கொண்டார். இந்நிலையில் ஆஷிகாவுக்கு சமீபத்தில் சேட்டன் ஷெட்டி குமார் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அவரது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகும் வரும் நிலையில் தமிழ் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை ஆஷிகா படுகோன் - சேட்டன் ஷெட்டி குமார் தம்பதியினருக்கு தெரிவித்து வருகின்றனர்.