'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ஆஷிகா படுகோன் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் சின்னத்திரை நடிகையாக பிரபலமாகியுள்ளார். நிஹாரிகா, த்ரிவேணி சங்கமம், கதலோ ராஜகுமாரி ஆகிய ஹிட் சீரியலில் நடித்து வந்த ஆஷிகா தமிழில் தமிழ்ச்செல்வி தொடரின் மூலம் அறிமுகமானார். தமிழ் ரசிகர்களிடையே இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றாலும் 247-வது எபிசோடிலேயே தொடர் முடிவுற்றது.
இதற்கிடையில் ஆஷிகா படுகோனும் தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியலின் பாதியிலேயே வெளியேறினார். எனினும் தமிழில் தனக்கான ரசிகர் பட்டாளத்தை இந்த தொடரில் நடித்ததன் மூலம் உருவாக்கி கொண்டார். இந்நிலையில் ஆஷிகாவுக்கு சமீபத்தில் சேட்டன் ஷெட்டி குமார் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அவரது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகும் வரும் நிலையில் தமிழ் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை ஆஷிகா படுகோன் - சேட்டன் ஷெட்டி குமார் தம்பதியினருக்கு தெரிவித்து வருகின்றனர்.