'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சினிமாவுக்கு நிகராக வெளி தளங்களிலும் இசை அமைத்து வருகிறார். விளையாட்டு போட்டிகள், பண்டிகைகள், தேசப்பற்று, மொழி உயர்வு ஆகியவற்றுக்கும் இசை அமைத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது டாக்குமென்டரி தொடர் ஒன்றுக்கு இசை அமைக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் டில்லியில், தற்கொலை செய்துகொண்ட புராரி குடும்பத்தினரைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று ‛ஹவுஸ் ஆப் சீக்ரெட்ஸ்: தி புராரி டெத்ஸ்' என்ற பெயரில் தொடராக உருவாகியுள்ளது. ஷப்த், பார்ச்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய லீனா யாதவ் மற்றும் அனுபவம் சோப்ரா ஆகியோர் இயக்கி உள்ளனர். இது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதற்கு ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசை அமைத்துள்ளார்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறியிருப்பதாவது: லீனா யாதவுடன் சேர்ந்து பணியாற்றியது தனித்துவமான அனுபவமாக இருந்தது. மிகவும் சிக்கலான, உணர்வுப்பூர்வமான பிரச்சினையை இந்தத் தொடர் பேசுவதால் இதற்காக வேறுபட்ட, நுணுக்கமான அணுகுமுறை இசையில் தேவைப்பட்டது. பூடகமாக அதே சமயம் சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். இப்படி ஒரு தொடரில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இதுவரை நான் செய்திராத ஒரு விஷயமாக இருந்தது, என்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.




