‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள படம் மாயோன். கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, பக்ஸ், ஹரீஷ் பேரடி மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படத்தை என்.கிஷோர் இயக்கி உள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் மூலம் பார்வையற்றோரும் படத்தை உணரும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஆடியோ வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. பார்வையற்றவர்கள் தியேட்டரில் படம் பார்க்கும்போது அவர்கள் அமர்ந்திருக்கும் சீட்டில் இயர்போன் இருக்கும். அதை அவர்கள் காதில் மாட்டிக் கொண்டால் திரையில் நடக்கும் காட்சிகள் அவர்களுக்கு விவரிக்கப்படும். இந்த தொழில்நுட்பம் வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தொழில்நுட்பம் ஏற்கெனவே சைக்கோ படத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது மாயோன் படத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து இந்த பணியை செய்துள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளியான இளங்கோ கூறியதாவது: இந்த டீசர் ஆடியோ விளக்கத்துடன் வெளியாகவுள்ளது. பொதுவாக இது பரவலாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. அனைவரும் ரசிக்கும் சினிமாவை மாற்றுத்திறனாளிகளும் ரசிக்க வேண்டும். இந்த படத்தில் டீசரில் வரும் குரலை நான் தான் பேசியுள்ளேன்.
வெளிநாடுகளில் முழுப்படங்களிலும் ஆடியோ விளக்கம் தருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக தனி கருவிகளில் மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரசிக்கும் படி ஆடியோ விளக்கம் செய்து வருகிறார்கள். அதில் தமிழகத்தில் முன்னோடியாக அருண்மொழி மாணிக்கம் சைக்கோ படத்தில், முழு படத்திற்கும் ஆடியோ விளக்கத்துடன் உருவாக்கியிருந்தார். அவருக்கு நன்றி. இவ்வாறு கூறினார்.