கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

சமீபத்தில் ஏ.ஆர் ரஹ்மான் ஒரு பேட்டியில் கூறும்போது ஹிந்தியில் தனக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாகவும் அதற்கு பின்னணியில் சில காரணங்கள் இருப்பதாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் கிளப்பின. தான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று பின்னர் ஏ.ஆர் ரஹ்மான் விளக்கமும் அளித்தார். இந்த நிலையில் ஹிந்தியில் ஏ.ஆர் ரஹ்மான் உடன் இணைந்து பணியாற்றிய ரப்பி ஷெர்கில் என்கிற பாடகர் அவருடன் பணியாற்றிய போது தனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து கூறியுள்ளார்.
இது குறித்து ரப்பி ஷெர்கில் கூறும்போது, “ஏ.ஆர் ரஹ்மான் ஒரு மிகப்பெரிய ஜீனியஸ். ஆனால் அவரது பாடல்களில் பாடல் வரிகளுக்கு இரண்டாவது இடம் தான் கொடுக்கப்படும். அதாவது உணர்வுகளுக்கு இரண்டாவது இடம் தான் என்று அர்த்தம். அதற்கு காரணம் ஹிந்தி அவருக்குத் தெரியாத ஒரு மொழி என்பதுதான். சொல்லப்போனால் ரஹ்மான் வந்த பிறகு ஹிந்தி திரை உலகில் பாடல் வரிகள் என்பது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. இதுதான் எனக்கும் அவருக்கும் இடையே ஒரு பிரச்சனையாக இருந்தது” என்று கூறியுள்ளார்.




