50வது படத்தின் படப்பிடிப்பு : அஞ்சலி மகிழ்ச்சி | தரத்திற்காக தள்ளிப் போன 'அயலான்' | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு ரத்து : காரணம் என்ன? | 'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட் | ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் | 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? | விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' |
தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில், பெங்களூரு இந்திராநகரில் இருந்து நேற்று முன்தினம் காலையில் வாடகை காரில் ராஜராஜேசுவரிநகரில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார். அப்போது காரில் ஏ.சி. போடும் விவகாரம் தொடா்பாக சஞ்சனாவுக்கும், டிரைவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் டிரைவரை சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜராஜேசுவரிநகர் போலீஸ் நிலையத்தில் நடிகை சஞ்சனா மீது டிரைவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் சஞ்சனாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சஞ்சனா கூறியிருப்பதாவது: என்னிடம் சொந்தமாக கார் இல்லை. சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. என்னிடம் பணமும் இல்லை. அதனால் தான் வாடகை காரில் சென்றேன். ஒரு சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள ராஜராஜேசுவரி நகருக்கு சென்றேன். ராஜராஜேசுவரிநகருக்கு செல்வதற்கு பதிலாக கெங்கேரி நோக்கி கார் சென்றது.
கார் வேறு பாதையில் சென்றதால், என்னை கடத்தி செல்வதாக உணர்ந்தேன். அதுபற்றி மட்டுமே டிரைவரிடம் கேட்டு தகராறு செய்தேன். அவரை தகாத வார்த்தையில் திட்டவில்லை. இந்த விவகாரத்தில் நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. என் மீது டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். எனது தரப்பு நியாயம் பற்றி போலீசாரிடம் தெரிவிப்பேன். என்றார்.