சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில், பெங்களூரு இந்திராநகரில் இருந்து நேற்று முன்தினம் காலையில் வாடகை காரில் ராஜராஜேசுவரிநகரில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார். அப்போது காரில் ஏ.சி. போடும் விவகாரம் தொடா்பாக சஞ்சனாவுக்கும், டிரைவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் டிரைவரை சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜராஜேசுவரிநகர் போலீஸ் நிலையத்தில் நடிகை சஞ்சனா மீது டிரைவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் சஞ்சனாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சஞ்சனா கூறியிருப்பதாவது: என்னிடம் சொந்தமாக கார் இல்லை. சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. என்னிடம் பணமும் இல்லை. அதனால் தான் வாடகை காரில் சென்றேன். ஒரு சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள ராஜராஜேசுவரி நகருக்கு சென்றேன். ராஜராஜேசுவரிநகருக்கு செல்வதற்கு பதிலாக கெங்கேரி நோக்கி கார் சென்றது.
கார் வேறு பாதையில் சென்றதால், என்னை கடத்தி செல்வதாக உணர்ந்தேன். அதுபற்றி மட்டுமே டிரைவரிடம் கேட்டு தகராறு செய்தேன். அவரை தகாத வார்த்தையில் திட்டவில்லை. இந்த விவகாரத்தில் நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. என் மீது டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். எனது தரப்பு நியாயம் பற்றி போலீசாரிடம் தெரிவிப்பேன். என்றார்.