அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி. போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில், பெங்களூரு இந்திராநகரில் இருந்து நேற்று முன்தினம் காலையில் வாடகை காரில் ராஜராஜேசுவரிநகரில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார். அப்போது காரில் ஏ.சி. போடும் விவகாரம் தொடா்பாக சஞ்சனாவுக்கும், டிரைவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் டிரைவரை சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜராஜேசுவரிநகர் போலீஸ் நிலையத்தில் நடிகை சஞ்சனா மீது டிரைவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் சஞ்சனாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சஞ்சனா கூறியிருப்பதாவது: என்னிடம் சொந்தமாக கார் இல்லை. சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. என்னிடம் பணமும் இல்லை. அதனால் தான் வாடகை காரில் சென்றேன். ஒரு சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள ராஜராஜேசுவரி நகருக்கு சென்றேன். ராஜராஜேசுவரிநகருக்கு செல்வதற்கு பதிலாக கெங்கேரி நோக்கி கார் சென்றது.
கார் வேறு பாதையில் சென்றதால், என்னை கடத்தி செல்வதாக உணர்ந்தேன். அதுபற்றி மட்டுமே டிரைவரிடம் கேட்டு தகராறு செய்தேன். அவரை தகாத வார்த்தையில் திட்டவில்லை. இந்த விவகாரத்தில் நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. என் மீது டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். எனது தரப்பு நியாயம் பற்றி போலீசாரிடம் தெரிவிப்பேன். என்றார்.