ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல நட்சத்திர ஜோடியான சமந்தா - நாகசைதன்யா இருவரின் காதல் திருமணம் நான்கு வருடங்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவருக்குமே அதிர்ச்சியான செய்தி தான். அதைவிட நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா பிரபல நடிகர். அவர்களது குடும்பமே பாரம்பரிய சினிமா குடும்பம். ஆனாலும் நாகசைதன்யாவின் திருமண முறிவு குறித்து அவரது தந்தை நாகார்ஜுனா கூறும்போது, இது துரதிஷ்டவசமான ஒன்று, அதேசமயம் இது அவர்கள் தனிப்பட்ட விஷயம்.. அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு தனது மகளின் திருமணம் முறிவு எதிர்பார்க்காத ஒன்று என்றும் அது குறித்து கேள்விப்பட்டதும் தனது மனம் கொஞ்ச நேரத்திற்கு செயலற்றுப் போய்விட்டதாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார். எல்லாம் சில நாட்களில் சரியாகி ஆகிவிடும் என்று முதலில் நினைத்ததாகவும் ஆனால் தனது மகள் சமந்தா தனது தரப்பு விளக்கங்களை கூறி தன்னை கன்வின்ஸ் செய்து விட்டதாகவும் கூறியுள்ளார் சமந்தாவின் தந்தை.