மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. குடும்ப பின்னணியில் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‛அண்ணாத்த அண்ணாத்த என்ற பாடலை மாலை 6மணிக்கு வெளியிட்டனர். ரஜினிக்காக பல ஓபனிங் பாடலை பாடி உள்ளார் எஸ்.பி.பி. அனேகமாக இந்த பாடலும் ஓபனிங் பாடலாக தான் இருக்கும் என தெரிகிறது. நம்பிக்கைக்கான வரிகளுடன் அண்ணாத்த ரஜினியின் புகழ்பாடும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.
இந்த பாடல் வெளியானதும் நடிகர் ரஜினி டுவிட்டரில், ‛‛45 ஆண்டுகள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி, அண்ணாத்தே படத்தில் எனக்காக பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.