'2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு | மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு |
சமந்தா, நாக சைதன்யா ஜோடி இல்லற வாழ்வில் இருந்து நான்கு வருடங்களுக்குள் பிரிந்தது தமிழ், தெலுங்குத் திரையுலகை மட்டுமல்லாது ஹிந்தித் திரையுலகம் வரை பரபரப்பாகப் பேச வைத்திருக்கிறது. பிரிவு பற்றிய அறிவிப்பை இன்ஸ்டாவில் பதிவிட்ட பிறகு வேறு எந்தப் பதிவையும் போடாமல் இருந்த சமந்தா, ஸ்டோரியில் இன்று பதிவிட்டிருக்கும் தத்துவார்த்தமான ஒரு விஷயம் எதையோ உணர்த்துவதாக உள்ளது.
“இந்த உலகத்தை நான் மாற்ற விரும்பினால், நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும். என் படுக்கையை நான் உருவாக்க வேண்டும். அதிகநேரம் தூங்க கூடாது, அலமாரியை துடைப்பது உள்ளிட்ட விஷயங்களை நானே செய்யணும். நம் கனவை ஜெயிக்க அதை நோக்கி நாம் போகணும், ம்ம்ம்ம்ம்ம்” எனப் பதிவிட்டுள்ளார்.