திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து புதிய படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீப்ரியா, ‛‛உள்ளாட்சித் தேர்தல், பிக்பாஸ், விக்ரம் படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன், வெற்றிமாறன் உடன் புதிய படத்திற்காக இணைய இருப்பதாக'' தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் ஒரு நாவலை கமலிடம் சொன்னதாகவும் அவருக்கு அந்த நாவல் பிடித்து விட்டதால் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்ட நிலையில் உள்ளதாகவும் விரைவில் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.