'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்ட நிலையில் நோய்க்கு பிந்தைய பாதிப்பால் செப்டம்பர் 25ம் தேதி காலமானார். அவருடைய உடல் சென்னைக்கு அருகிலுள்ள தாமரைப்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
அவரது நினைவு நாளையொட்டி பொதுமக்கள் அங்கு அஞ்சலி செலுத்த சென்றனர். ஆனால் அங்கிருந்த பண்ணை ஆட்கள் பொதுமக்களை உள்ளே விட மறுத்தனர். இந்த நிலையில் எஸ்.பி.பி.சரண் அங்கு வந்து தந்தையின் சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் இதுகுறித்து எஸ்.பி.பி.சரண் கூறியதாவது: கொரோனா சூழலால் காவல்துறையினர் பொதுமக்களை அனுமதிப்பதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. எஸ்.பி.பி ரசிகர்கள் கூட்டமைப்பு மற்றும் குடும்பத்தினர் மட்டுமே இங்கு வந்துள்ளோம். கடந்த ஓராண்டாக அவர் இல்லாவிட்டாலும், செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. தெலுங்கில் 22 ஆண்டுகளாக அவர் நடத்திக் கொண்டிருந்த நிகழ்ச்சியை இப்போது நான் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறேன். நிறைய நிகழ்ச்சிகள், கச்சேரிகள் நடத்தி அப்பாவின் பாடல்களை பாடி வருகிறேன்.
அப்பா அடக்கம் செய்யப்பட்டுள்ள இந்த இடத்தில் அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்ட திட்டமிட்டு வருகிறோம். அதோடு மியூசியம், இசைக்கூடம் கட்ட திட்டமிட்டிருக்கிறேன். இந்த பணிகள் முடிய சில ஆண்டுகள் ஆகலாம். இந்த பணிகளுக்காக தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்தவொரு உதவியும் கேட்கவில்லை. எஸ்.பி.பி அறக்கட்டளை மூலமாகவே ஒரு பகுதியைக் கட்டவுள்ளோம். மீதமுள்ளதை கட்ட தமிழக அரசிடம் வேண்டுகோள் வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். என்றார்.




