ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் மகாபலிபுரத்தில் நடந்த ஒரு விருந்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும்போது கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது தோழி பவானி மரணம் அடைந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நடக்கத் தொடங்கி உள்ளார்.
நடிகர் அசோக் அவரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார், அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு " யாஷிகா பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு வலுவாக அதிலிருந்து மீண்டு வருவதை கண்டு பெருமைப்படுகிறேன் என்று எழுதியிருக்கிறார்.
யாஷிகா தற்போது கால் எலும்புகள் சரியாகி நடக்க பயிற்சி எடுத்து வருகிறார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.