ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? |
நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் மகாபலிபுரத்தில் நடந்த ஒரு விருந்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும்போது கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது தோழி பவானி மரணம் அடைந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நடக்கத் தொடங்கி உள்ளார்.
நடிகர் அசோக் அவரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார், அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு " யாஷிகா பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு வலுவாக அதிலிருந்து மீண்டு வருவதை கண்டு பெருமைப்படுகிறேன் என்று எழுதியிருக்கிறார்.
யாஷிகா தற்போது கால் எலும்புகள் சரியாகி நடக்க பயிற்சி எடுத்து வருகிறார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.