கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் மகாபலிபுரத்தில் நடந்த ஒரு விருந்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும்போது கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது தோழி பவானி மரணம் அடைந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நடக்கத் தொடங்கி உள்ளார்.
நடிகர் அசோக் அவரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார், அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு " யாஷிகா பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு வலுவாக அதிலிருந்து மீண்டு வருவதை கண்டு பெருமைப்படுகிறேன் என்று எழுதியிருக்கிறார்.
யாஷிகா தற்போது கால் எலும்புகள் சரியாகி நடக்க பயிற்சி எடுத்து வருகிறார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.