Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமாவின் 'சார்லி சாப்ளின்' : நாகேஷ் எனும் மகா கலைஞன் பிறந்தநாள் ஸ்பெஷல்

27 செப், 2021 - 11:05 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-Legendary-Nagesh-sir

தமிழ் திரையுலகின் சார்லி சாப்ளின் என்றால் அனைவரும் அறிந்த ஒரே பெயர் நாகேஷ். நகைச்சுவை என்ற ஒரே வட்டத்திற்குள் பயணப்படாமல் கதாநாயகன், குணச்சித்திரம், எதிர்மறை கதாபாத்திரம் என்று தனது நடிப்பு பரிமாணத்தை பெரிதாக்கி பெரும் வெற்றி கண்ட திரைச்சிற்பி. இவரின் 89வது பிறந்ததினமான இன்று அவரைப்பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்.

தாராபுரம் அருகே கொழிஞ்சிவாடியில் 1933ம் ஆண்டு செப்., 27ல் கிருஷ்ணன் ராவ் - ருக்மணி அம்மாள் தம்பதியரின் மகனாக பிறந்தார் செய்யூர் கிருஷ்ணா நாகேஷ்வரன் எனும் நாகேஷ். தனது பள்ளிக் கல்வியை தாராபுரத்திலும், கல்லூரிக் கல்வியை கோவை பி எஸ் ஜி கலைக் கல்லூரியிலும் பயின்றார்.

ரயில்வேயில் எழுத்தராக தனது ஆரம்ப கால பணியை மேற்கொண்டார் நடிகர் நாகேஷ். நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல அமெச்சூர் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். மணியனின் "டாக்டர் நிர்மலா" என்ற நாடகத்தில் "தை தண்டபாணி" என்ற கதாபாத்திரத்தில் நடித்ததனால் "தை நாகேஷ்" என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். காலப்போக்கில் ஆங்கிலத்தில் இவரது பெயருக்கு முன் உள்ள தை என்ற வார்த்தையை "தாய்" என்று உச்சரிக்க "தாய் நாகேஷ்" ஆனார்.

ஒருமுறை இவரது நாடகத்தை காண சிறப்பு விருந்தினராக வந்திருந்த எம்.ஜி.ஆர் இவரது நடிப்பை வெகுவாக பாராட்ட அன்றிலிருந்து சிறு சிறு வேடங்களில் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்த இவர், இயக்குநர் முக்தா சீனிவாசன் இயக்கி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த "தாமரைக்குளம்" என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடமேற்று நடித்து வந்தாலும் பெரிதாக இவர் அடையாளம் காணப்படவில்லை.

பின்னர் 1962 ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதர் இயக்கி வெளிவந்த நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் மருத்துவமனை வார்டு பாயாக இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் இவருக்கு ஒரு நல்ல திருப்பத்தை தந்தது. தொடர்ச்சியாக "பணத்தோட்டம்", "நானும் ஒரு பெண்", "பெரிய இடத்துப் பெண்", "நெஞ்சம் மறப்பதில்லை", "வேட்டைக்காரன்" என ஏராளமான படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவர, 1964 ஆம் ஆண்டு மீண்டும் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் "காதலிக்க நேரமில்லை" திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த "செல்லப்பா" என்ற கதாபாத்தி;ரம் இவரை நகைச்சுவை நடிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

தலைமுறைகள் பல கடந்தும் இன்றும் அப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம், வசனம், உடல்மொழி, என ஒவ்வொன்றும் ரசிகர்களால் ஆராதிக்கப் படுகின்றன. "திருவிளையாடல்" படத்தில் "தருமி", "தில்லானா மோகனாம்பாள்" திரைப்படத்தில் "சவடால் வைத்தி", "எங்க வீட்டுப் பிள்ளை" படத்தில் "கோவிந்தன்", "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் "அழகன்", "அன்பே வா" படத்தில் "ராமையா" என இவ்வாறு இவர் தனது உடல் மொழியால் நகைச்சுவை எனும் அருமருந்தை அள்ளித் தெளித்த படங்கள் ஏராளம், ஏராளம்.

நாகேஷ் என்ற இந்த அற்புத கலைஞனுடைய நடிப்பின் வேறொரு பரிமாணத்தை வெள்ளித்திரையில் காணச் செய்த பெருமை இயக்குநர் கே பாலசந்தருக்கு உண்டு. கே பாலசந்தரின் கதை வசனத்தில் இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த "சர்வர் சுந்தரம்" திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி நடிப்பின் உச்சம் தொட்டார் நாகேஷ். தொடர்ந்து "நீர்க்குமிழி", "மேஜர் சந்திரகாந்த்", "அனுபவி ராஜா அனுபவி", "எதிர் நீச்சல்" என தனது இயக்கத்தில் நாகேஷை நாயகனாக்கி அழகு பார்த்தார் இயக்குநர் சிகரம் கே பாலசந்தர்.

நடிகர் கமல்ஹாசனின் சொந்தப்படமான "அபூர்வ சகோதரர்கள்" திரைப்படத்தில் கொடிய வில்லன் கதாபாத்திரத்தில் தனக்கே உரிய உடல் மொழி மற்றும் வித்தியாசமான வசன உச்சரிப்பால் வில்லன் கதாபாத்திரத்திலும் உச்சம் தொட்டார். எல்லாவற்றிற்கும் மேல் மகளிர் மட்டும் திரைப்படத்தில் பிணமாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஒப்பற்ற கலைஞன் நடிகர் நாகேஷ்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்த பெருமைமிகு நடிகர். தன் மகன் நடிகர் ஆனந்த் பாபுவை நாயகனாக்கி, பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற ஒரு படத்தை, திரைக்கதை எழுதி இயக்கி இயக்குநராகவும் தன்னை காட்டிக் கொண்டார்.

எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர் தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா. முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக் கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் நாகேஷ் பாணி என்கிற தனி முத்திரையைக் கொண்டு வந்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு நம்மவர் படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது. கலைமாமணி, வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார். தசாவதாரம் கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!

தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், ஹிந்தி என 1000 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் இந்த ஈடில்லா கலைஞனின் வீட்டில் இவர் வாங்கிய ஷீல்டுகள் எதையும் மற்றவரின் பார்வைக்கு காட்சிப் படுத்தாமல் ஒரு எளிய மனிதராக எதார்த்தமான வாழ்க்கையை வாழ்ந்து, வரும் தலைமுறை இளம் கலைஞர்களுக்கு ஒரு பாடமாக வாழ்ந்து விட்டு சென்றவர் நடிகர் நாகேஷ் என்றால் அது மிகையன்று.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சம்பளம் முக்கியமல்ல - அனைகாசம்பளம் முக்கியமல்ல - அனைகா நடக்க தொடங்கினார் யாஷிகா ஆனந்த் நடக்க தொடங்கினார் யாஷிகா ஆனந்த்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

shanan -  ( Posted via: Dinamalar Android App )
28 செப், 2021 - 12:25 Report Abuse
shanan we missed the zem
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
27 செப், 2021 - 20:15 Report Abuse
Vena Suna அருமை.பெரிய நடிகர்.அவர் ஜெர்ரி லீவிஸ் என்ற அமெரிக்கா காமெடியனின் ரசிகன் என்று தன்னையே சொல்லி உள்ளார்.சில படங்களில் அப்படி செய்தும் உள்ளார்.
Rate this:
27 செப், 2021 - 15:58 Report Abuse
மதுமிதா சரித்திரம் படைத்த குணசித்தரமும் சிரிக்கவும் வைத்த நகைச்சுவை அரசன் அவருக்கு பின் அந்த இடம் இன்று வரை வெற்றிடம் தான்
Rate this:
27 செப், 2021 - 15:32 Report Abuse
சாம் வணக்கம் அய்யா.
Rate this:
27 செப், 2021 - 15:32 Report Abuse
சாம் வணக்கம் அய்யா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in