உணர்ச்சிக் குவியலாய் வந்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் | ‛பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீடு கோலாகலம் : சிவப்பு கம்பள வரவேற்பில் நனைந்த திரைப்பிரபலங்கள் | டப்பிங் யூனியன் சீல் அகற்றம் | ஒய் திஸ் கொலவெறி பாடலுடன் நாட்டு நாட்டு பாடலை ஒப்பிட்ட கீரவாணி | விடுதலை படம் சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது : பவானி ஸ்ரீ | மார்ச் 31ல் ஆர்யாவின் அடுத்த பட டீசர் வெளியீடு | மீண்டும் சர்ச்சையில் நாக சைதன்யா, ஷோபிதா காதல் | போலா 2ம் பாகத்திற்கு லீட் கொடுத்த அபிஷேக் பச்சனின் சர்ப்ரைஸ் என்ட்ரி | இளையராஜா இசையில் ஹிந்தியில் உருவான மியூசிக் ஸ்கூல் | இறப்பதற்கு முன் மஞ்சு வாரியரிடம் இன்னொசென்ட் சொன்ன கடைசி வார்த்தை |
நட்பே துணை படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் அனைகா. டிக்கிலோனா படத்தில் இரண்டு நாயகியரில் ஒருவராக நடித்தார். இப்படத்தில் ‛பேர் வச்சாலும் வைக்காம போனாலும்...' பாடல் மூலம் பிரபலமாகியுள்ளார். அவர் அளித்த பேட்டி:
மலையாளத்தில் முதலில் நடித்தேன். நட்பே துணை தமிழில் முதல் படம். டிக்கிலோனா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நடிப்பின் மீதான ஆர்வத்தாலேயே நடிக்க வந்தேன். தமிழில் ஒரு படத்திலும், மலையாளத்தில் ஒன்றிலும் நடித்து வருகிறேன். தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க வேண்டும். சம்பளம் முக்கியமல்ல. வித்தியாசமான கதையம்சத்துடன், நடிப்புக்கு சவால் தரும் வேடங்களில் நடிக்க வேண்டும். மாடலிங் பிடிக்கும் என்பதால் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறேன். எதிர்மறையான விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதில்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் தமிழில் அதிகம் வருகிறது. இது வரவேற்க கூடிய ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.