ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமை நாகேஷ். கதாநாயகன், காமெடியன், வில்லன், குணசித்ர நடிகன் என பன்முகம் கொண்டவர். சினிமா பற்றிய ஞானம் கொண்டவர். அப்படிப்பட்டவர் கே.பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் வற்புறுத்தியும் படம் எதையும் இயக்கவில்லை. "நான் ஜாலியான ஆளு, டைரக்ஷன் டென்ஷனான வேலை அது எனக்கு சரிப்பட்டு வராது" என்று கூறிவிடுவார்.
அப்படி இருந்தும் அவர் ஒரே ஒரு படத்தை இயக்கினார். அந்த படம் 'பார்த்த ஞாபகம் இல்லையோ'. இது அவர் தன் மகனுக்காக இயக்கியது. மகன் ஆனந்த் பாபு சினிமாவில் அறிமுமாகி மளமளவென பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. ஒரு வெற்றிப் படத்தின் மூலம் அவரை தூக்கி நிறுத்த வேண்டிய கடமை அப்பா நாகேஷிற்கு இருந்தது. அதனால் அவர் முதன் முறையாக இயக்குனராக மாறி இந்த படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் ஆனந்த் பாபுவுடன் ரம்யா கிருஷ்ணன், ராதாரவி, தேங்காய் சீனிவாசன், ஆர்.எஸ்.மனோகர் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இரட்டை சகோதரிகள் சிறு வயதிலேயே பிரிந்து விடுகிறார்கள். ஒருத்தி பணக்கார வீட்டிலும், இன்னொருத்தி ஏழை வீட்டிலும் வளர்க்கப்படுகிறார்கள். இருவரையும் வைத்து ஆள்மாறாட்ட கதையாக காமெடி கலந்து படம் உருவானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. நாகேசும் தொடர்ந்து படம் இயக்கவில்லை.