'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு |
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமின் மகன் எஸ்பிபி சரண். பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். திடீரென சமூகவலைதளத்தில் சோனியா அகர்வால் உடன் இணைந்து எடுத்த போட்டோவை பகிர்ந்து இருந்தார். கூடவே ஏதோ புதியது உருவாகிறது என்றும் பதிவிட்டு இருந்தார். இது சோசியல் மீடியாவில் பலதரப்பட்ட யூகங்களை வெளிப்படுத்தி வந்தது. குறிப்பாக இருவரும் திருமணம் செய்ய போவதாக நினைத்து பலரும் கமெண்ட்டில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த செய்தி வைரலாக பரவியது.
இதையடுத்து மற்றொரு போட்டோவை சரண் பகிர்ந்தார். அதில் அவருடன் சோனியா, அஞ்சலி, சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர். அதோடு வெப் சீரிஸ் என்ற ஹேஸ்டேக், பிலிம் புரடக்சன் என்றும் பதிவிட்டார். இதையடுத்தே இவர்கள் இணைந்து எடுத்தது ஒரு வெப்சீரிஸிற்காக என்பது தெரிய வந்தது. ஆனால் அதற்குள் பலரும் திருமணம் அப்படி, இப்படி என வதந்திகளை பரப்பிவிட்டனர்.