விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் |
மதுரையே சேர்ந்த வடிவேலுவின் குலதெய்வ கோவில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள காட்டுபரமக்குடியில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் திருவேட்டரை அய்யனார்தான் வடிவேலுவின் குல தெய்வம். ஒவ்வொரு ஆண்டும் வடிவேலு இங்கு குடும்பத்துடன் வந்து வழிபடுவது வழக்கம்.
இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் ஒன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சேத்தூர் கிராமத்தில் உள்ளது. சுமார் 5 கோடி மதிப்பிலான 25 ஏக்கர் நிலம் அது. இந்த நிலத்தை மீட்டுத்தருமாறு குலதெய்வ வழிபாட்டு பக்தர்கள் அறநிலையத்துறையிடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் நிலத்தை மீட்டனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை வடிவேலு சந்தித்த பிறகே இந்த மீட்பு நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.