தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் |

மதுரையே சேர்ந்த வடிவேலுவின் குலதெய்வ கோவில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள காட்டுபரமக்குடியில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் திருவேட்டரை அய்யனார்தான் வடிவேலுவின் குல தெய்வம். ஒவ்வொரு ஆண்டும் வடிவேலு இங்கு குடும்பத்துடன் வந்து வழிபடுவது வழக்கம்.
இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் ஒன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சேத்தூர் கிராமத்தில் உள்ளது. சுமார் 5 கோடி மதிப்பிலான 25 ஏக்கர் நிலம் அது. இந்த நிலத்தை மீட்டுத்தருமாறு குலதெய்வ வழிபாட்டு பக்தர்கள் அறநிலையத்துறையிடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் நிலத்தை மீட்டனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை வடிவேலு சந்தித்த பிறகே இந்த மீட்பு நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.