'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மதுரையே சேர்ந்த வடிவேலுவின் குலதெய்வ கோவில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள காட்டுபரமக்குடியில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் திருவேட்டரை அய்யனார்தான் வடிவேலுவின் குல தெய்வம். ஒவ்வொரு ஆண்டும் வடிவேலு இங்கு குடும்பத்துடன் வந்து வழிபடுவது வழக்கம்.
இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் ஒன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சேத்தூர் கிராமத்தில் உள்ளது. சுமார் 5 கோடி மதிப்பிலான 25 ஏக்கர் நிலம் அது. இந்த நிலத்தை மீட்டுத்தருமாறு குலதெய்வ வழிபாட்டு பக்தர்கள் அறநிலையத்துறையிடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் நிலத்தை மீட்டனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை வடிவேலு சந்தித்த பிறகே இந்த மீட்பு நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.