ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஆடுகளம் டாப்ஸிக்கு அதன்பிறகு தமிழில் சரியான படங்கள் இல்லாததால் ஆந்திராவில் மையம் கொண்டு சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே கோடம்பாக்கமும் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்திருப்பதால் தூங்கிக்கொண்டிருந்த அவரது மார்க்கெட் இப்போது சூடுபிடித்திருக்கிறது. அதனால் எந்நேரமும் பரபரவென்று திரிந்து கொண்டிருக்கிறார் நடிகை. அவரது வேகத்தைப்பார்த்த ராகவா லாரன்ஸ் தமிழ், தெலுங்கில் தான் இயக்கி நடிக்கவுள்ள முனி படத்தின் மூன்றாம் பாகமான கங்கா படத்தில் நாயகியாக நடிப்பதற்கு அவரை கமிட் பண்ணியுள்ளார்.
ஆனால் இந்த செய்தி அறிந்து செம டென்சனாகி விட்டார் லட்சுமிராய். காரணம், காஞ்சனா வெற்றி பெற்றதில் இருந்தே அப்படத்தின் அடுத்த பாகத்திலும் நான்தான் நடிப்பேன் என்று லாரன்சை துரத்தி வந்தார். ஆனால் முதலில் வாக்குறுதி அளித்த லாரன்ஸ் இப்போது படம் தொடங்கும் நேரத்தில் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு விட்டு, டாப்ஸி பக்கம் சாய்ந்து விட்டார். இதனால் தன்னை நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டதாக லாரன்ஸ் மீது புகார் சொல்லும லட்சுமிராய், லாரன்சுக்கு ஈடுகொடுத்து ஆடக்கூடிய நடிகை நான். அதனால் என்னை தவிர எந்த நடிகையை அவர் நடிக்க வைத்தாலும் எனது இடத்தை நிரப்ப அவர்களால் முடியவே முடியாது. இந்த உண்மையை படப்பிடிபபு நடக்கும்போதே கண்டிப்பாக லாரன்ஸ் புரிந்து கொள்வார் என்கிறார் லட்சுமிராய்.