கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

பன்முக திறமைக்கொண்ட விஜய் ஆண்டனியின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் 'கோடியில் ஒருவன்'. 'மெட்ரோ' படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். அரசியல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ராஜா தயாரித்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனியே கவனித்துள்ளார். இந்த படம் தென்னந்தியாவில் மொத்தம் 819 திரையரங்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சென்னை 18, செங்கல்பட்டு 73, வட மற்றும் தென் ஆற்காடு 73, கோவை 55, மதுரை 43, திருச்சி 32, சேலம் 55, திருநெல்வேலி 18, கர்நாடகா 125, ஆந்திரா மற்றும் தெலுங்கானா 327 திரையரங்குகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.