அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

கடந்த மாதம் துவங்கிய கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். நடிகர் பிரகாஷ் ராஜும் தனது அறக்கட்டளை மூலமாக பாதிக்கப்பட்ட பலருக்கும் நிறைய உதவிகள் செய்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற ஊரைச் சேர்ந்த ஏழைக்குடும்பம் ஒன்று வறுமையில் வாடுவதை அறிந்து, அந்த குடும்பத்திற்கென சொந்தமாகவே பல லட்சம் மதிப்புள்ள ஜேசிபி இயந்திரம் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் பிரகாஷ்ராஜ். அவரது இந்த செயல் ரசிகர்களிடம் பெருவாரியாக பாராட்டை பெற்றாலும், ஒரு சிலர் இப்படி ஒரே நபருக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை செய்வதற்கு பதிலாக அதை 10 பேருக்கு பிரித்து செய்தால் பத்து குடும்பம் நன்றாக இருக்குமே என்றும் கருத்து கூறுவதையும் பார்க்க முடிகிறது.