நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
கடந்த மாதம் துவங்கிய கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். நடிகர் பிரகாஷ் ராஜும் தனது அறக்கட்டளை மூலமாக பாதிக்கப்பட்ட பலருக்கும் நிறைய உதவிகள் செய்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற ஊரைச் சேர்ந்த ஏழைக்குடும்பம் ஒன்று வறுமையில் வாடுவதை அறிந்து, அந்த குடும்பத்திற்கென சொந்தமாகவே பல லட்சம் மதிப்புள்ள ஜேசிபி இயந்திரம் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் பிரகாஷ்ராஜ். அவரது இந்த செயல் ரசிகர்களிடம் பெருவாரியாக பாராட்டை பெற்றாலும், ஒரு சிலர் இப்படி ஒரே நபருக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை செய்வதற்கு பதிலாக அதை 10 பேருக்கு பிரித்து செய்தால் பத்து குடும்பம் நன்றாக இருக்குமே என்றும் கருத்து கூறுவதையும் பார்க்க முடிகிறது.