22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கொரோனா இரண்டாவது அலை சற்று ஓய்ந்துள்ள நிலையில், தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கில் கோபிசந்த் ஜோடியாக தமன்னா நடித்துள்ள சீட்டிமார் படம் வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து தமன்னா நடித்துள்ள மேஸ்ட்ரோ என்கிற படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதனால் மேஸ்ட்ரோ படக்குழுவினர் தற்போது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தமன்னாவிற்கு ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டது. ஒருபக்கம் மேஸ்ட்ரோ படத்தின் பிரஸ்மீட்டும், இன்னொரு பக்கம் சீட்டிமார் படத்தின் சக்சஸ் மீட்டும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் நடைபெற்றன. இரண்டிலுமே தமன்னா கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் மேஸ்ட்ரோ படம் இன்னும் ரிலீஸ் ஆகாததால் அந்த படத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து தமன்னா செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தமன்னாவோ மேஸ்ட்ரோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் முதலில் கலந்து கொண்டு, அதன்பிறகு உடனடியாக சீட்டிமார் படத்தின் சக்சஸ் மீட்டிலும் தனது வருகையை பதிவு செய்து தனது தொழில் பக்தியை வெளிப்படுத்தியுள்ளார். தாங்கள் நடித்த படத்திற்கு புரமோஷனுக்கு வராத நடிகைகள் மத்தியில் தமன்னாவின் இந்த செயல் தெலுங்கு திரையுலகில் பாராட்டை பெற்று வருகிறது.