நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடமையை செய் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிய யாஷிகா இடுப்பு, கால் பகுதிகளில் பலத்த அடிபட்டு, ஆபரேஷன் செய்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எழுந்து நடக்க 6 மாதங்களாவது ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது உடல்நிலை பற்றி அவ்வப்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் யாஷிகா.
இந்நிலையில் டுவிட்டரில் தற்போது தான் இருக்கும் நிலை குறித்து ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார் யாஷிகா. அதில் படுக்கையில் படுத்தப்படியாக இரு கால்களில் பெரிய கட்டுடன் உள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி வரும் யாஷிகா இந்த போட்டோவிற்கு கேப்ஷனாக எனது வலிமை என பதிவு செய்துள்ளார். சீக்கிரம் குணமாகி வர ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.