எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடமையை செய் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிய யாஷிகா இடுப்பு, கால் பகுதிகளில் பலத்த அடிபட்டு, ஆபரேஷன் செய்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எழுந்து நடக்க 6 மாதங்களாவது ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது உடல்நிலை பற்றி அவ்வப்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் யாஷிகா.
இந்நிலையில் டுவிட்டரில் தற்போது தான் இருக்கும் நிலை குறித்து ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார் யாஷிகா. அதில் படுக்கையில் படுத்தப்படியாக இரு கால்களில் பெரிய கட்டுடன் உள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி வரும் யாஷிகா இந்த போட்டோவிற்கு கேப்ஷனாக எனது வலிமை என பதிவு செய்துள்ளார். சீக்கிரம் குணமாகி வர ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.