நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் | கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் நிவின்பாலியின் 'சர்வம் மாயா' | உங்க பட ரிலீஸ் தேதியை மாற்ற முடியுமா லாலேட்டா ? ; ரிலீஸ் தேதியை அறிவிக்க நடிகரின் புதிய யுக்தி | 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி |
கடந்த இரண்டு வருடங்களுக்குள் தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகராக மாறியுள்ளளார் விஜய் தேவரகொண்டா. இவரது படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவினாலும் கூட இவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் சிவா நிர்வானா என்பவர் டைரக்ஷனில் விஜய் தேவரகொண்டா ஒரு படம் நடிப்பதாக ஒப்பந்தமானது, ஆனால் இந்த படம் மேற்கொண்டு வளராமல் அப்படியே நின்றது.
கொரோனா தாக்கம் காரணமாக தான் படம் துவங்குவதற்கு தாமதம் என பலரும் நினைத்துக் கொண்டிருக்க, திடீரென இந்த படத்தை விஜய் தேவரகொண்டா அதே இயக்குனரை வைத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதன் பின்னணியை விசாரித்தால் விஜய் தேவரகொண்டாவின் சம்பளம் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இந்த படத்தை அப்படியே அவர் கிடப்பில் போட்டு விட்டாராம். அவருக்கு பதிலடி தரும் விதமாக தான் விஜய் தேவரகொண்டா அதே கதையை அதே இயக்குனரை வைத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் நடிக்க தயாராகிவிட்டாராம்.