டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? |
கடந்த இரண்டு வருடங்களுக்குள் தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகராக மாறியுள்ளளார் விஜய் தேவரகொண்டா. இவரது படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவினாலும் கூட இவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் சிவா நிர்வானா என்பவர் டைரக்ஷனில் விஜய் தேவரகொண்டா ஒரு படம் நடிப்பதாக ஒப்பந்தமானது, ஆனால் இந்த படம் மேற்கொண்டு வளராமல் அப்படியே நின்றது.
கொரோனா தாக்கம் காரணமாக தான் படம் துவங்குவதற்கு தாமதம் என பலரும் நினைத்துக் கொண்டிருக்க, திடீரென இந்த படத்தை விஜய் தேவரகொண்டா அதே இயக்குனரை வைத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதன் பின்னணியை விசாரித்தால் விஜய் தேவரகொண்டாவின் சம்பளம் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இந்த படத்தை அப்படியே அவர் கிடப்பில் போட்டு விட்டாராம். அவருக்கு பதிலடி தரும் விதமாக தான் விஜய் தேவரகொண்டா அதே கதையை அதே இயக்குனரை வைத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் நடிக்க தயாராகிவிட்டாராம்.