''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த படம் இந்தியன்-2. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கமலுக்கு மேக்கப் அலர்ஜி, லாக்டவுன் என சில காரணங்களால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்காமல் அதிக தாமதமாகி வந்தது. இப்படியான நிலையில் ஒரு வருட காலம் இந்தியன்-2 படப்பிடிப்பை லைகா நிறுவனம் கிடப்பில் போட்டிருந்தது. இதனால் கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரம் படத்தை தொடங்கி விட்டார்.
ஷங்கர், ராம்சரண் நடிப்பில் தில்ராஜூ தயாரிப்பில் ஒரு படத்தை தொடங்கினார். இதையடுத்து இந்தியன்-2 படத்தை இயக்கி விட்டுதான் வேறு படத்தை இயக்க செல்ல வேண்டும் என்ற நீதிமன்றம் மூலமாக ஷங்கருக்கு தடை போட்டது லைகா நிறுவனம். ஆனால் விசாரணைக்குப் பிறகு ஷங்கருக்கு தடை கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் ராம்சரண் நடிக்கும் படவேலைகளை தொடங்கினார் ஷங்கர். இந்தநிலையில், நேற்று அந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டைரக்டர் ஷங்கரிடத்தில் இந்தியன்-2 படம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லி நான்கு வாரங்கள் கால அவகாசம் கேட்டார். இதனால் நீதிபதி வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.