ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த படம் இந்தியன்-2. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கமலுக்கு மேக்கப் அலர்ஜி, லாக்டவுன் என சில காரணங்களால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்காமல் அதிக தாமதமாகி வந்தது. இப்படியான நிலையில் ஒரு வருட காலம் இந்தியன்-2 படப்பிடிப்பை லைகா நிறுவனம் கிடப்பில் போட்டிருந்தது. இதனால் கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரம் படத்தை தொடங்கி விட்டார்.
ஷங்கர், ராம்சரண் நடிப்பில் தில்ராஜூ தயாரிப்பில் ஒரு படத்தை தொடங்கினார். இதையடுத்து இந்தியன்-2 படத்தை இயக்கி விட்டுதான் வேறு படத்தை இயக்க செல்ல வேண்டும் என்ற நீதிமன்றம் மூலமாக ஷங்கருக்கு தடை போட்டது லைகா நிறுவனம். ஆனால் விசாரணைக்குப் பிறகு ஷங்கருக்கு தடை கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் ராம்சரண் நடிக்கும் படவேலைகளை தொடங்கினார் ஷங்கர். இந்தநிலையில், நேற்று அந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டைரக்டர் ஷங்கரிடத்தில் இந்தியன்-2 படம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லி நான்கு வாரங்கள் கால அவகாசம் கேட்டார். இதனால் நீதிபதி வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.