ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற வில்லனாக நடித்த அருண் விஜய்யின் மார்க்கெட் மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து குற்றம் 23, தடம் போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் தற்போது அக்னிச் சிறகுகள், பாக்ஸர், சினம், பார்டர், ஹரி இயக்கும் படம் என பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் தனது 33ஆவது படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு நாகூர் தர்கா அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றபோது அந்த தர்காவிற்குள் சென்று தொழுகை நடத்திய அருண் விஜய், அந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு, எம்மதமும் சம்மதம் என்றும் தெரிவித்துள்ளார்.