''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற வில்லனாக நடித்த அருண் விஜய்யின் மார்க்கெட் மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து குற்றம் 23, தடம் போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் தற்போது அக்னிச் சிறகுகள், பாக்ஸர், சினம், பார்டர், ஹரி இயக்கும் படம் என பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் தனது 33ஆவது படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு நாகூர் தர்கா அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றபோது அந்த தர்காவிற்குள் சென்று தொழுகை நடத்திய அருண் விஜய், அந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு, எம்மதமும் சம்மதம் என்றும் தெரிவித்துள்ளார்.