நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் சந்தானம். அவர் நடித்து எப்போதோ வெளிவர வேண்டிய 'சர்வர் சுந்தரம்' படம் அடுத்தடுத்து பல்வேறு காரணங்களால் வெளியீடு தள்ளிக் கொண்டே வந்தது.
கடைசியாக கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால், அப்போது சந்தானம் நடித்த மற்றொரு படமான 'டகால்டி' படத்தை வெளியிட அதன் தயாரிப்பாளர் முடிவு செய்தார். பின்னர் நடைபெற்ற பஞ்சாயத்தில் 'சர்வர் சுந்தரம்' படத்தை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைத்தார்கள். ஆனால், அப்போதும் அப்படம் வெளிவரவில்லை.
பட வெளியீடு குறித்து அதன் இயக்குனர் பால்கி பல முறை அவருடைய வருத்தத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று ரசிகர் ஒருவர் சந்தானத்திடம் இன்ஸ்டாகிராமில் பட வெளியீடு குறித்து கேட்டதற்கு, படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று சொன்னார் சந்தானம்.
இப்படத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா, நாகேஷ் பேரன் பிஜேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.