நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சமீபத்தில் கடந்து சென்ற சர்வதேச நாய்கள் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்களுடைய செல்லப்பிராணிகளுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விலங்குகளை நேசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். அந்த வகையில் நடிகை கனிகா தனது செல்லப்பிராணியான மேகி என்கிற நாயுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளதுடன் பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நாய் வளர்ப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகிறோம். ஆனால் தயவு செய்து நாய்களை விலைக்கு வாங்கும் பொருளாக கருதாதீர்கள், நாய்களை தத்தெடுத்து அவற்றையும் நம் வீட்டில் உள்ள ஒரு ஜீவனாக பாவித்து அன்பு செலுத்தி வளருங்கள். நம்மீது நம்பிக்கை வைத்து அளவில்லா அன்பை திருப்பி செலுத்தும் அந்தப் பிராணி கொடுக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்று கூறியுள்ள கனிகா நாய்களை எங்கே தத்தெடுக்கலாம் என்கிற விபரத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.