‛வார் 2' படத்தால் ‛கூலி' படத்திற்கு அடித்த ஜாக்பாட் | சூர்யா 45 படத்தில் படமாக்கப்பட்ட பிரமாண்ட பாடல் காட்சி | சச்சின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்தின் தலைப்பு இதுவா? | 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி தரும் வின்சென்ட் செல்வா | 'எம்.குமரன்' ரீ-ரிலீஸ் : நதியா மகிழ்ச்சி | குட் பேட் அக்லி ஓடிடியில் வெளியாகும் தேதி, ரசிகர்கள் அதிர்ச்சி | பிரகாஷ்ராஜ், ராணா, விஜய் தேவரகொன்டா மீது வழக்கு பதிவு | ஐபிஎல் சீசன் : இரண்டு மாதங்களுக்கு தியேட்டர்களுக்கு சிக்கல் | 'ஹிருதயபூர்வம்' முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாளவிகா மோகனன் |
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பலரும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகையான கனிகா, தனது குடியிருப்பு இடத்தை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு சிக்கி தவித்ததாக கூறினார். இதனையடுத்து மீட்பு குழுவினர் அங்கு சென்று கனிகாவை பத்திரமாக மீட்டுள்ளனர். இதற்காக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள கனிகா, 'நாங்கள் மீட்கப்பட்டோம். குடிநீர் விநியோகம் இல்லை. மின்சாரம் இல்லை. வெள்ளநீர் அளவு அதிகரித்து கொண்டே இருக்கிறது. எங்களுக்கு வேறு வழியே இல்லை. மீட்பு குழுவினருக்கும் அவர்கள் முயற்சிக்கும் நன்றி' என்று கூறியுள்ளார்.