விஜயகாந்த் மகனின் உருக்கமான ஆசை | கர்ப்பிணி பெண்களின் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட அமலாபால் | மம்முட்டியை இயக்கும் கவுதம் மேனன் | சிவகார்த்திகேயனை இயக்க தயாராகும் சிபி சக்ரவர்த்தி | எனக்கு பிடித்த இடம் : நயன்தாரா | 'கூலி' படப்பிடிப்புக்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு ? | திருச்செந்தூர், கன்னியாகுமரி கோயில்களில் கணவருடன் நயன்தாரா வழிபாடு | புதுமுகங்களின் 'குற்றம் புதிது' | கன்னட ஹீரோ மீது கொடூர தாக்குதல் | சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத் தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி |
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பலரும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகையான கனிகா, தனது குடியிருப்பு இடத்தை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு சிக்கி தவித்ததாக கூறினார். இதனையடுத்து மீட்பு குழுவினர் அங்கு சென்று கனிகாவை பத்திரமாக மீட்டுள்ளனர். இதற்காக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள கனிகா, 'நாங்கள் மீட்கப்பட்டோம். குடிநீர் விநியோகம் இல்லை. மின்சாரம் இல்லை. வெள்ளநீர் அளவு அதிகரித்து கொண்டே இருக்கிறது. எங்களுக்கு வேறு வழியே இல்லை. மீட்பு குழுவினருக்கும் அவர்கள் முயற்சிக்கும் நன்றி' என்று கூறியுள்ளார்.