‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பலரும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகையான கனிகா, தனது குடியிருப்பு இடத்தை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு சிக்கி தவித்ததாக கூறினார். இதனையடுத்து மீட்பு குழுவினர் அங்கு சென்று கனிகாவை பத்திரமாக மீட்டுள்ளனர். இதற்காக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள கனிகா, 'நாங்கள் மீட்கப்பட்டோம். குடிநீர் விநியோகம் இல்லை. மின்சாரம் இல்லை. வெள்ளநீர் அளவு அதிகரித்து கொண்டே இருக்கிறது. எங்களுக்கு வேறு வழியே இல்லை. மீட்பு குழுவினருக்கும் அவர்கள் முயற்சிக்கும் நன்றி' என்று கூறியுள்ளார்.