'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவரது நடிப்பில் அனிமல் படம் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. 'ரெயின்போ' என்கிற படத்திற்கு பிறகு ராஷ்மிகா மீண்டும் 'தி கேர்ள் பிரண்ட்' எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த படத்தை பாடகி சின்மயி கணவர், நடிகர் மற்றும் இயக்குனர் ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கும் இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். நேற்று டிசம்பர் 5ந் தேதி இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் ராஷ்மிகா கலந்து கொண்டுள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் தொடரும் என்கிறார்கள்.