கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவரது நடிப்பில் அனிமல் படம் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. 'ரெயின்போ' என்கிற படத்திற்கு பிறகு ராஷ்மிகா மீண்டும் 'தி கேர்ள் பிரண்ட்' எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த படத்தை பாடகி சின்மயி கணவர், நடிகர் மற்றும் இயக்குனர் ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கும் இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். நேற்று டிசம்பர் 5ந் தேதி இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் ராஷ்மிகா கலந்து கொண்டுள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் தொடரும் என்கிறார்கள்.