ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் சந்தோஷ் நாராயணன். சென்னை பெரு மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இதுதொடர்பாக சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட பதிவில், “தொடர்ந்து 10 ஆண்டுகள் வெள்ளப்பெருக்கில் எங்கள் குளப்பாக்கம் பகுதி வீடுகள் மழை நீரால் சூழப்படுவதும், 100 மணிநேரம் மின்சார தடையும் எதிர்கொள்கிறோம்.
குளப்பாக்கம் ஏரியோ, தாழ்வான பகுதியோ அல்ல. பரந்த நிலமும், நீர்நிலைகளும் உள்ள பகுதி. அலட்சியம், பேராசை, மோசமான நிர்வாகமே மழை நீரையும், சாக்கடையையும் ஒரே கால்வாய்க்குள் கலக்க செய்து இப்பகுதியை நீரில் மூழ்கடிக்கிறது. இந்த நேரத்தில் யாராவது நோய்வாய்ப்படுவதும் தீவிரமாக பாதிக்கப்பட்டு மரணமும் ஏற்படுகின்றன. என்னிடம் படகு உள்ளது. என்னால் முடிந்த அளவு உதவுகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.