கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் விவகாரம் தொடர்பாக நடிகர் வடிவேலு - இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க தடை விலகியுள்ளது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
இதுப்பற்றி வடிவேலு அளித்த ஒரு பேட்டியில், ‛‛இது எனக்கு மறுபிறவி. மீண்டும் சினிமாவில் நான் தோன்றப் போவது முதன் முதலில் நான் வாய்ப்பு தேடும் போது ஏற்பட்ட உணர்வு ஏற்பட்டுள்ளது. சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் நடிக்கிறேன். இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. லைகா சுபாஷ்கரன் மூலம் எனக்கு மறுவாழ்வு ஏற்பட்டுள்ளது. லைகா நிறுவனத்திற்கு 5 படங்கள் நடிப்பேன். ஏன் 10 படங்களில் கூட நடிப்பேன். என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள். முதல்வரை சந்தித்ததும் எனக்கு நல்ல காலம் பிறந்தது'' என்றார்.