ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் விவகாரம் தொடர்பாக நடிகர் வடிவேலு - இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க தடை விலகியுள்ளது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
இதுப்பற்றி வடிவேலு அளித்த ஒரு பேட்டியில், ‛‛இது எனக்கு மறுபிறவி. மீண்டும் சினிமாவில் நான் தோன்றப் போவது முதன் முதலில் நான் வாய்ப்பு தேடும் போது ஏற்பட்ட உணர்வு ஏற்பட்டுள்ளது. சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் நடிக்கிறேன். இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. லைகா சுபாஷ்கரன் மூலம் எனக்கு மறுவாழ்வு ஏற்பட்டுள்ளது. லைகா நிறுவனத்திற்கு 5 படங்கள் நடிப்பேன். ஏன் 10 படங்களில் கூட நடிப்பேன். என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள். முதல்வரை சந்தித்ததும் எனக்கு நல்ல காலம் பிறந்தது'' என்றார்.